Sunday, 28th April 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் சிமெண்டு குடோன்யில் பணிபுரிகிறார் மற்றும் சமையல் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அப்துல் காதருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 18சவரன் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர். கைரேகை நிபுணர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கலை கண்ணகி கைரேகைகளை சேகரித்தார்.
தஞ்சையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை குறித்து பாபநாசம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகரத்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோன்று நேற்று முன்தினம் பாபநாசத்தில் 15 பவுன் 5000 ரொக்கம் கொள்ளை அடித்தது குறிப்பிடத்தக்கது.